IPL - 2020

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது – சஞ்சு சாம்சன்

மகேந்திர சிங் தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது; அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி வருகிறாா். சென்னைக்கு எதிராக 74 ரன்களும், பஞ்சாபுக்கு எதிராக 85 ரன்கள் குவித்து ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடித்தந்தாா்.

இதனையயடுத்து கிரிக்கெட் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பலர் இந்தியாவின் அடுத்த தோனி சஞ்சு சாம்சன் என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அதை மறுத்துள்ள சாம்சன், மேலும் கூறியிருப்பதாவது: தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது; அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் தோனியோடு ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள் என்றார் .

தோனியைப் போன்று நான் விளையாடியதாக ஒருபோதும் நினைத்ததில்லை. தோனி அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான். நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்? எப்படி ஆட்டத்தை வென்று தர முடியும் என்பதை மட்டுமே சிந்திக்கிறேன் எனக் சாம்சன் தெரிவித்துள்ளார் .