Covid19இந்தியா

அக்டோபர் 15-முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – மத்திய அரசு வெளியிட்ட புதிய தளர்வுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது .

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புது புது தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. தமிழக அரசு சார்பில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் , மத்திய அரசு புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் கட்டுப்பாடு விதிமுறைகளுடன் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .