தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். பிற மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும், இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’.