அருணாசலில் புதிதாக 239 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி
அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 239 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 239 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 11,998-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,940 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 23 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 2,695 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 2,73,441 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.