உலகம்

பாகிஸ்தானில் பாடசாலை ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பெஷாவர் நகரில், மத வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கோரசம்பவத்தில் , 7 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும், மதராஸாவில் பிளாஸ்டிக் பையில் ஒன்றில் சுமார் 6 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை வைத்துச் சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.