Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,370 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 2,370 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் : தமிழகத்தில் இன்று மட்டும் 80,786 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 2,370 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 612 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,39,147ஆக உயர்ந்துள்ளது.

மறுபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 2402 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து8,946-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 19,002 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 21 போ் அரசு மருத்துவமனைகளிலும், 6 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,299-ஆக உயா்ந்துள்ளது.