10 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி.49
நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கும் கவுண்டவுனை தொடர்ந்து, நாளை மாலை 3.02 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இதில், இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அனுப்பப்பட உள்ளது. அத்துடன், வணிக ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளைச் சேர்ந்த, 9 பன்னாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.