சினிமாதமிழ்நாடு

தீபாவளிக்கு அனைத்துத் திரையரங்குகளும் திறக்கப்படுவதாக அறிவிப்பு!

தீபாவளிக்கு அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் 7 மாதங்களுக்கு பிறகு 50 இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்ற அரசு நிபந்தனையோடு திறக்கப்பட்டன.

புதிய படங்கள் வெளியாகாததால் ஏற்கனவே வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் கொரோனா அச்சத்தாலும் பழைய படங்களை திரையிட்டதாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

பார்வையாளர்கள் வராததால் 800 தியேட்டர்களை திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் வி.பி.எப் கட்டண பிரச்சனையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டு தீபாவளிக்கு புதிய படங்களை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர்.