2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்
2021-22 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஆலோசனை வழங்க, மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்காக, நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையை பெற ஏற்கனவே பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்தை mygov.in என்ற இணைய தளத்தில் நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை தெரிவிக்கலாம் எனவும், இந்த கருத்துகள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.