தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடருமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக, லட்சத்தீவு பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வலியுறுத்தப்பட்டுள்ளது.