தமிழகத்தில் புதிதாக 1,663 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 1,663 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,663 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,68,340 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,586 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,43,838 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12,916 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.