வரும் சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் – மு.க.அழகிரி
வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை வில்லாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தனிக் கட்சி தொடங்க திட்டமா என கேட்கப்பட்டது. தனது ஆதரவாளர்களுடன் விரைவில் ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்த மு.க.அழகிரி, பாஜகவில் தான் இணைய உள்ளதாக கூறப்படுவது வதந்தி என்றார்.
துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதா என கேட்டதற்கு ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என மு.க.அழகிரி கூறினார்.