அரசியல்தமிழ்நாடு

11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 214 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சத்து 45 ஆயிரம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

நடப்புக் கல்வியாண்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 214 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைக்கும் அடையாளமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் மாணவ மாணவியர் 9 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிதிவண்டிகளை வழங்கினார்.