நாடார் சங்க பிரமுகர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சந்திப்பு
இன்று நாடார் சங்க பிரமுகர்கள் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களை சந்தித்து அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரை வைக்கவேண்டும் எனவும் , அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் விளையாட்டு வீரர்களுக்கு விருது ,மற்றும் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு தபால் தலை வெளியிடவேண்டும் எனவும் கோரிக்கை மனுவை வழங்கினர்.
இந்த நிகழ்வில் என் ஆர் தனபாலன்,த.பத்மனாபன், ராஜ்குமார், சுந்தரேஸ்வரன், கொட்டிவாக்கம்.முருகன் மயிலை சந்திரசேகர், மாரித்தங்கம் ஆலந்தூர் கணேசன் மற்றும் கார்த்திகேயன் ,ஆகியோருடன் காயத்ரி ரகுராம் பங்கேற்றார் .