ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்பு 5 ஆட்டங்களான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
தற்போது மூன்று ஆட்டங்களான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் முதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. இதில் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் சேர்த்தார்.
இதன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களில் 10 விக்கெட்களை இழந்தது. இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.