மத்திய அரசு உடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை – முதல்வர் பழனிச்சாமி!
மத்திய அரசான பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டுக்கு பல திட்டங்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் என அரவக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதில் பேசிய முதல்வர்; பாஜக வேட்பாளர் அண்ணாமலையை அரவக்குறிச்சி மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பெருமளவில் முன்னேற பாஜகவும் பிரதமர் மோடியும் பல ஆலோசனையை வழங்கி வருகின்றனர். மத்திய அரசுடன் இணைந்து இருந்தால் மாநிலங்கள் நல்ல திட்டங்கள் கொண்டு வர நிதி கிடைக்கும்.
மேலும், விவசாயத்திற்கு நீர் முக்கியம் என்பதால் குடிமரத்து பணியில் அதிகமாக கவனம் செலுத்தப் பட்டது என தெரிவித்தார். இதனால் அதிமுக அமைத்துள்ள கூட்டணி வெற்றி பெறும் கூட்டணி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.