அரசியல்

தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் – முதல்வர் பழனிசாமி காட்டம்!

தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் தான் திமுகவில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் திமுக கூட்டணியில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேற்குத் தொகுதி வேட்பாளர் செல்லூர் ராஜுவை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர்; இந்தத் தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார். எனக்குப் பிறகு என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது ஏன் உதயநிதியை அழைத்து வந்தார் என கேள்வி எழுப்பினார். திமுகவினர் காற்றில் கூட ஊழல் செய்துள்ளனர் என முதல்வர் விமசித்தார்.

அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணிதான் மக்களின் நலனுக்காக பாடுபடும் கூட்டணி. மக்களுக்காக தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது அதிமுக அரசு மீது ஸ்டாலின் அவதூறு கருத்துக்களை பிரச்சாரத்தில் சொல்லிக்கொண்டு வருகிறார்.

திமுகவால் எந்த நன்மையும் மக்களுக்கு ஏற்படாது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி இதுவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கெட்ட கட்சியா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.