தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டம் அமலாகாது – ஸ்டாலின் உறுதி!

குடியுரிமை திருத்த சட்டம் எந்த காரணத்தாலும் அமல்படுத்தப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனிடையே திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; குடியுரிமை திருத்த சட்டம் எந்த காரணத்தாலும் அமல்படுத்தப்படாது.

அந்த சட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்குவதற்கு வலியுறுத்துவோம். மேலும், எப்பொழுதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.