புதுச்சேரியில் பிரதமர் மோடி; நாளை 144 தடை!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார். அங்கு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். இதனால் நாளை ஒருநாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் இருக்கும் 30 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதனால் அந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார். அங்கு பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனால் பிரதமரின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் வான்வெளியில் விமானங்கள், ட்ரான்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை ஒருநாள் மட்டும் புதுச்சேரியில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.