பாஜக வெற்றிப்பெறும் இயந்திரமல்ல; விமர்சனத்துக்கு முற்று புள்ளி வைத்த பிரதமர் மோடி!
இன்று உடன் பாரதிய ஜனதா கட்சி துவங்கப்பட்டு 41வது ஆண்டு நிறைவடைகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் உடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர்; பாஜக தேர்தலில் வெற்றி பெரும் இயந்திரம் அல்ல, மற்றவர்கள் வெற்றி பெற்றாலும் பாராட்டுவோம். ஆனால் பாஜக வெற்றி பெற்றால் இரட்டை கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
பாஜக வெற்றி பெற்றால் இயந்திரம் என சொல்பவர்களுக்கு வாக்காளர்களின் அறிவையும், மக்களின் நம்பிக்கையையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். பாஜக வெற்றி தொடர்ந்து வெற்றி பெறுவதால் மக்களின் மனங்களை கவர்ந்து உள்ளோம் என்று அர்த்தம். நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்து வருகிறோம் மக்களுடன் இணைந்து உள்ளோம்.

மேலும், கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் பாஜகவினர் தாக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அவர்களுடைய குடும்பத்யையும் விட்டு வைப்பதில்லை. நாம் தொண்டர்கள் வாழ்வதற்கும், இறப்பதற்கு முன் வைக்கின்றனர்.
சிஏஏ, வேளாண் சட்டம், தொழிலாளர் சட்டம் போன்றவற்றை எதிராக அரசியல் கட்சியினர் சதி செய்து வருகிறார்கள். இதனை நம்முடைய தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.