அரசியல்இந்தியா

200க்கும் மேலான தொகுதியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் – அமித்ஷா உறுதி!

மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேலான தொகுதியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனால் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராஜூப் பானர்ஜியை ஆதரவு தெரிவித்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; இங்கு நான் ஒரு கிராம பஞ்சாயத்தை தான் பார்த்தேன். அங்கு இருக்கும் ஆனந்தத்தை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இதில் இருந்து தெரிகிறது ராஜூப் பானர்ஜி நிச்சயம் வெற்றிபெறுவார் என தெரிவித்தார்.

மேலும், மே இரண்டாம் தேதி மேற்கு வங்காளத்தில் 200-க்கும் மேலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.