தமிழ்நாடு

சேலத்தில் இரண்டாவது தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்டார் – முதலமைச்சர் பழனிசாமி!

சேலத்தில் அரசு மருத்துமனையில் இரண்டாவது தடுப்பூசி மருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செலுத்திக் கொண்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் மார்ச் 11ஆம் தேதி முதல் கட்ட கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தி கொண்டார். தமிழக தேர்தலுக்கு வாக்களிக்க அவருடைய சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தார். தற்போது இன்னும் அவர் சென்னைக்கு திரும்பவில்லை.

இதனிடையே இன்று சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி மருந்தைச் செலுத்திக் கொண்டார். இதன் பின் செய்தியாளரிடம் பேசிய அவர் கூறியது;

மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மற்றும் கட்டுப்பாடுகளையும் மக்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம்கள், படுக்கை வசதிகள் தேவையான அளவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.