காஷ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சூடு ஏற்பட்டது. அந்த துப்பாக்கி சூட்டில் முதலில் மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து மறைந்திருந்த 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொன்றனர். மறைந்திருந்த 2 தீவிரவாதிகளையும் சரணடைய சொல்லி பாதுகாப்பு வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அவர்கள் மறுத்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவரையும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.