அரசியல்

ஜூலையில் புதிய கட்சி துவக்கம் – ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி!

தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை மாதம் புதிய கட்சியை ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி துவங்குகிறார்.

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை மாதம் 8ஆம் தேதி புதிய கட்சி துவங்க உள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் வரும் ஜூலை 8-ஆம் தேதி ஷர்மிளா புதிய கட்சியை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். அன்றே கட்சியின் பெயர், சின்னம் போன்றவற்றை வெளியிடப்படும் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 8-ஆம் தேதி ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி நினைவு நாள் என்பது குறிப்பிடதக்கது.