தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மறைவுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் போட்டியிட்டார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த மறு நாளே உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் திரு. மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என முதலவர் பதிவிட்டுள்ளார்.