தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து; தமிழ் மக்களுக்காக பணியாற்றுவோம்!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றம் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தமிழக மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வாழ்த்து செய்தியில்; சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில் பேரன்பு கொண்ட தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய “தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

பழம்பெருமையும், இலக்கிய வளமும் நிறைந்த நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் தமிழ் மக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, தமிழக மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேலும் உயர்வடைய, நமது கட்சி முழு அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றும் என்பதை இந்நாளில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; தமிழர் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எங்களது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.