உலக அளவில் இதுவரை 13 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு; மக்களை அச்சுறுத்தும் இரண்டாம் அலை!
உலக அளவில் இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களில் குறைவாக இருந்த நிலையில், மார்ச் மாதத்திலிருந்து இரண்டாவது அலை பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில்கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உலகில் 13.96 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11.87 கோடிக்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர். 29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு கோடியே 79 லட்சத்துக்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியாவில் 1,42,87,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,25,43,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 1,74,335 பேர் உயிரிழந்துள்ளனர்.