இந்தியா

முன்னாள் மத்திய புலனாய்வு இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உயிரிழந்தார்!

முன்னாள் மத்திய புலனாய்வு இயக்குநர் (சிபிஐ) ரஞ்சித் சின்ஹா இன்று காலை 4.30 மணி அளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சிபிஐ இயக்குனர் மற்றும் டிஜி ஐடிபிபி உள்ளிட்ட பல்வேறு மூத்த பதவிகளை வகித்த ரஞ்சித் சின்ஹா இன்று அதிகாலை 4:30 மணியளவில் டெல்லியில் உயிரிழந்தார்.

1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து சிபிஐ இயக்குனராகவும், டிஜி ஐடிபிபி போன்ற பதிவில் இருந்துள்ளார். நேற்று இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் டெல்லியில் உயிரிழந்துள்ளார்.