இந்தியாவுக்கு நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிறையில் உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனால் இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், நீரவ் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துதுக்கு தப்பித்தார்.
இதன் பின் 2019ஆம் ஆண்டு நீரவ் மோடியை இங்கிலாந்தில் கைது செய்தனர். இதை தொடர்ந்து நீரவ்வை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத்தில் நீரவ்வை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல் அனுமதி அளித்துள்ளார். .