அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி வீடு திரும்பினார்!
ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடலிறக்கம் அறுவை சிகிச்சைக்காக நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதற்கு பின்பு முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதனிடையே அறுவை சிகிச்சை நலன் மூடன் முடிந்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மேலும், மூன்று நாட்கள் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.