இந்தோனேசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு; 2,788 அடியில் மூழ்கியதாக தகவல்!
இந்தோனேசியாவில் மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் 2,788 அடி கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் மூன்று நாட்களுக்கு முன்பு பாலித்தீவின் வட பகுதியில் பயிற்சியை மேற்கொண்ட போது காணாமல் போனது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 மாலுமிகள் இருந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆறு போர்க் கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்களும் மீட்பு வேலையில் ஈடுபட்டது. இதையடுத்து காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் கடல் அடியில் மூழ்கி விட்டது என இந்தோனேசியா தெரிவித்தது.
தற்போது, இந்த நீர்மூழ்கி கப்பல் சுமார் 2 ஆயிரத்து 788 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலிருந்து 53 மாலுமிகல் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.