இந்தியா

கடினமான நேரத்தில் உதவி செய்த சிங்கப்பூர் அரசு; அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

கொரோனா வைரஸ் முதலாவது அலையில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி மருந்து கொடுத்து உதவி செய்தது இதற்கு ஐநா சபையும் பாராட்டுகளை தெரிவித்து.

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேலான உயிரிழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இதனிடையே இந்தியாவுக்கு உதவி செய்வதற்கு சிங்கப்பூர் அரசு தயாராக உள்ளது என தெரிவித்தது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டது; நான் சிங்கப்பூர் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இங் எங் ஹென் உடன் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேசினோம். இந்த கடினமான காலங்களில் இந்தியாவுக்கு உதவுவதில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன் என அமைச்சர் பதிவிட்டுள்ளார்.