பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு..! சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி…
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ஆனால் பின்னர் ஏற்றம் கண்டது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,546 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,769 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.244.75 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.55 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.13 புள்ளிகள் குறைந்து 52,693.57 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 42.30 புள்ளிகள் சரிவு கண்டு 15,732.10 புள்ளிகளில் முடிவுற்றது.