இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்..
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின், இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இன்று ( வியாழன் கிழமை) மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்கிறது. அதற்கான 25 மணி நேர கவுண்டவுன்ட் நேற்று ( ஜூன் 29 ஆம் தேதி ) மாலை 5 மணிக்கு தொடங்கியது.
டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட் , ஸ்கூப் 1 , நியூசர் ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட இருக்கிறது, முழுக்க முழுக்க வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இந்த ராக்கெட்டை இஸ்ரோ முன்னெடுத்திருக்கிறது.
இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி சி- 53 ராக்கெட் திட்டம் இதுவேயாகும். பிஎஸ்எல்வி சி – 53 ராக்கெட் தாங்கிச் செல்லும் டிஎஸ்- இஓ செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதை நிலைநிறுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு, வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உள்ளது.
அதேபோல் ஸ்கூப் 1 செயற்கைகோள் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர் . இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன.