முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடற்சோர்வு சற்று இருந்ததன் காரணமாக பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறியிருந்தார்.
கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் அதில் இருந்து மீண்டு வர பலரும் தங்கள் வாழ்த்தினை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
2 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், . கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது .