அரசியல்தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி : ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்த இ.பி.எஸ்.

பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்ற அதிமுக தலைமை கழகம் கூறியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசன நடத்தினார். அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்ற அதிமுக தலைமை கழகம் கூறியுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு ! இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திருக்கிம், கழக இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.