சினிமாதமிழ்நாடு

அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – வழக்கறிஞர் நோட்டீஸ்

அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என அவரது தரப்பு வழக்கறிஞர் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சில நிறுவனங்கள் பிரபலமடைவதற்காக ரஜினி பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் ரஜினி வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.