தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் வானிலை நிலவரத்தை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் அறிக்கையின் வாயிலாக தெரிவித்து வருகிறது. இதேபோல் இன்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையானது அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.