இந்தியா

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ‘தாண்டியா’ நடனமாடி அசத்திய ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா தின விழா கொண்டாட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ரங்க்லீலா கலை குழுவினர் ஸ்ருதி சோக்சி தலைமையில் தாண்டியா நடனமாடினார்கள். இதில் கலந்து கொண்ட பெண்கள் ஆளுநர் தமிழிசை முன்னிலையில் நடனமாடினார்கள். குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை உடன் ஆடும்படி அப்பெண்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க ஆளுநர் தமிழிசையும் நடனமாடினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, “மதம்,மொழி,கலாச்சாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. ஆனால் அரசியலுக்காக எந்த வேற்றுமையும் ஏற்படுத்தாமல் தேச ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மக்களுடன் நடனமாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இங்கு கோலாட்டம். அங்கு தாண்டியா என்கிறோம். இதுவே தேச ஒற்றுமைக்கு உதாரணம். பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிகிழமை இரண்டு மணி நேர வேலையில் ஓய்வு சலுகை என்பது பெண் அடிமைதனம் என திமுக,காங் விமர்சனம் செய்கிறது. ஆனால் இதில் பெண் அடிமை தனம் இல்லை” என்றார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை உறுதி தன்மை இல்லையா…? என கேட்டதற்கு ஆளுநர் உறுதியாக இருக்கார். கட்டிடம் தான் பழைய கட்டிடடம் என்பதால் பழமை மாறாமல் சீர் செய்யப்பட இருக்கிறது என்றார். ரஜினியை ரோஜா விமர்சித்து வருவது குறித்து கேட்டதற்கு அதற்குள் போகவிரும்பவில்லை என பதிலளித்தார்.