அரசியல்தமிழ்நாடு

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் செந்திபாலாஜியை காண குவியும் அமைச்சர்கள்..!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய விசாரணை குழுவான அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டதது .

நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி - மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal

பின்னர் திடீரென இரவோடு இரவாக எந்த வித முன்னறிவிப்பின்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சுயநினைவின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை காண அதிகாலை முதல் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , மா சுப்ரமணியன் , நேரு, சேகர் பாபு , ஐ பெரியசாமி , ரகுபதி மற்றும் தொண்டர்கள் என பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர் .இதனால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுளள்னர் . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார் .