அரசியல்தமிழ்நாடு

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அண்ணாமலை மரியாதை..!

தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Image

இந்நிலையில், தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

Image

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களும் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெற உழைத்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது 66 ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை தினமான இன்று, தமிழக பாஜக சார்பாக பரமக்குடியில் உள்ள ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவிடத்தில், மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினோம்.

சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம். அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தை ஒவ்வொருவரும் மனதில் ஏந்தி, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம் என தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.