தமிழ்நாடு

5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது – தமிழக அரசு அறிவிப்பு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட செங்குன்றம்‌ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்‌ ஆய்வாளர்‌ .கா.மு.முனியசாமி உள்பட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

மதுவிலக்கு அமலாக்கப்‌ பணியில்‌ பாராட்டத்தக்க வகையில்‌ பணியாற்றியமைக்காக திரு.கோ.சசாங்சாய்‌, இ.கா.ப. காவல்‌ கண்காணிப்பாளர்‌, விழுப்புரம்‌. மாவட்டம்‌, திரு.ப.காசிவிஸ்வநாதன்‌, காவல்‌ துணைக்கண்காணிப்பாளர்‌, மத்திய நுண்ணறிவு பிரிவு. தெற்கு. சென்னை, திரு.கா.மு.முனியசாமி. காவல்‌ ஆய்வாளர்‌, செங்குன்றம்‌ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஆவடி காவல்‌ ஆணையரகம்‌, திரு. அ. பாண்டியன்‌, காவல்‌ உதவி ஆய்வாளர்‌, மத்திய நுண்ணறிவு பிரிவு மதுரை மண்டலம்‌ மற்றும்‌ திரு.ஜெ.ரங்கநாதன்‌, தலைமை காவலர்‌ 318, இராணிப்பேட்டை காவல்‌ நிலையம்‌, அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு, இராணிப்பேட்டை ஆகியோருக்கு காந்தியடிகள்‌ காவலர்‌ விருது வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்‌.

இவ்விருது, முதலமைச்சர்‌ அவர்களால்‌ 2024-ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ 26-ஆம்‌ நாள்‌, குடியரசு தினத்தன்று வழங்கப்படும்‌ இவ்விருதுடன்‌. பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும்‌ வழங்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.