அரசியல்இந்தியா

மதரீதியாக மாவட்டம் பிரிப்பு…கொந்தளித்த யோகி

பஞ்சாப்:மூஸ்லீம்கலள் அதிகம் வசித்த பகுதியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதை தன் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் சேர்த்திருந்தது.

தற்போது ,காங்கிரஸ் முதல்வரான கேப்டன் அம்ரேந்தர்சிங் ரம்ஜா, இதை நிறைவேற்றும் பட்சத்தில் சங்ரூர் மாவட்டத்திலிருந்து மலேர்கோட்லாவை தலைமை இடமாக கொண்டு அதே பெயரில் புதிய மாவட்டம் அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பஞ்சாபின் 23 ஆவது மாவட்டமாக மலேர்கோட்லா உருவாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார்.

அதில்,இந்த புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பு காங்கிரஸ் பிரித்து ஆளும் கொள்கையை பின்பற்றுவது அம்பலமானது.

மேலும்,மதம் மற்றும் நம்பிக்கையின் சார்பில் பாகுபாடு காட்டுவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறானது’’ எனச் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் வெளியிட்டுள்ள டுவிட்ட்ர் பதிவில், ‘பஞ்சாப் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உ.பி.க்கு நல்லது. பாஜக ஆட்சியில், பிரித்தாலும் அழிவுகரமான கொள்கைகள் அரங்கேறுகின்றன என்றார்.

மேலும் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் கடந்த 4 வருடங்களாக உ.பி.யில் மதக்கலவரங்களை தூண்டி வருகிறது. மலேர்கோட்லாவின் வரலாற்றை பற்றி உ.பி. முதல்வருக்கு என்ன தெரியும்?’ எனக் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1454 இல் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளரான ஷேக் சத்ரூத்தீநெ-ஜஹானால் மலேர்கோட்லா உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1657 இல் பயாசித் கான் என்பவரால் அது தனி மாகாணமாக்கப்பட்ட்து

ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாடு பிரிக்கப்பட்ட சூழலில் பஞ்சாப் முழுவதிலும் கலவரம் வெடித்தும், மலேர்கோட்லா மட்டும் அமைதியாக இருந்தது. இதற்கு அங்கு 1705 இல் நிகழ்ந்தவரலாற்று சம்பவம் காரணம் எனக் கருதப்படுகிறது.

அப்போது சீக்கியர்களின் 10 ஆவது குருவான கோவிந்த்சிங்கின் மகன்களான 9 மற்றும் 7 வயதில் சாஹிப்ஜாதா ஜோரோவார்சிங்கும், சாஹிப்ஜாதா பதேசிங்கும் இருந்தனர். இவர்களை சிதைக்க மலேர்கோட்லாவின் ஆளுநரான சிரிஹிந்த் வஜீர் கான் கட்டலையிட்டார்.

இது இஸ்லாமியற்கும், அவர்களது புனிதக் குர்ஆன் கொள்கைக்கும் எதிரானது என மலேர்கோட்லாவின் நவாபு ஷேர் முகம்மது கான் எதிர்த்துள்ளார். அவர் உயிருடன் இருக்கும் வரை அந்த இரண்டு வாரிசுகளான நவாப்ஜாதாக்களை காத்துள்ளார்.

இதற்கு நன்றியாக, பிரிவினையின் கலவரத்தில் சீக்கியர்கள் மலேர்கோட்லாவின் முஸ்லிம்களை காத்தார்கள் எனவே, கலவரம் ஏற்படவில்லை என வரலாற்று பதிவில் உள்ளது. அதில், பஞ்சாப் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் சென்றும், மலேர்கோட்லாவினரை மட்டும் அங்கு செல்ல சீக்கியர்கள் அனுமதிக்கவில்லை என்பது வரலாறு.

இதில் பார்க்கப்பட வேண்டியது இஸ்லாமியர்களுக்கு என்று தனி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது மதரீதியாக எந்த ஒரு மாவட்டமோ, மாநிலமோ பிரிக்கப் படக்கூடாது என்பது இந்திய அரசியல் சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளை தனியே பிரித்தாள் மதசார்பின்மை கேள்விக்குறியாகிவிடும் என்று பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.