நாகை மீனவர்களை மீட்கக் கோரி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
கொச்சி அருகே கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது கொச்சி அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது டவ்-தே புயலில் சிக்கி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
அவர்களை விரைந்து கண்டறியும் வகையில் கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்து உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
