20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்…
இந்தியாவில் 20 லட்சம் பேரின் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
புதிய விதிகளின்படி, மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம தேதிக்குள் வாட்ஸ் அப் பயனாளர்களின் 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் கூறிய விளக்கத்தில், தவறுகள் நடக்கும் முன்பாக அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல், அதற்கு எதிர்மறையான கருத்துக்களைப் பெறும்போது கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்பட்டள்ளதாக கூறியுள்ளது. எங்கள் குழுவின் முடிவுகள், எங்களது செயல்திறனை மேம்படுத்த வழி செய்யும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.