நாட்டுப்படகு மானிய டீசல் 400 லிட்டராக உயர்கிறது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 300 லிட்டரில் இருந்து 400 லிட்டராக உயர்தப்பட உள்ளதாக மீன வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராமேஸ்வரம், மண்டபத்தில் கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களிடையே உரையாடினார். அப்போது பேசிய அமைச்சர் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 300 லிட்டரில் இருந்து 400 லிட்டராக உயர்த்தப்பட உள்ளதாக மீனவர்களிடையே உறுதி அளித்தார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தெடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் விசைப்படகுகளுக்கான மானிய டீசல் அளவும் 1,800 லிட்டரில் இருந்து உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.