கொரோனாவை சமாளிக்க டெல்லிக்கு நிதியுதவி வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி!
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஐபில் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லி மாநிலத்திற்க்கு ரூபாய் 1.5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரசால் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு உதவ பல உலக நாடுகள் முன் வந்து உதவிகளை செய்து வருகிறது. மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவற்றை கொடுக்க தயாராக உள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், பிரட் லீ மற்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்றோர் நிதியுதவி அளித்துள்ளனர். இதை போல் ஐபில் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரூபாய் 5.7 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரூபாய் 1.5 கோடி நிதி உதவியை அளித்து உள்ளது. இதை பற்றி ட்விட்டர் பதிவில்; இந்த கொரோனா சூழலை சமாளிக்க JSWFoundation மற்றும் ஜி.எம்.ஆர் வரலட்சுமி அறக்கட்டளை இணைந்து டெல்லி மாநிலத்துக்காக ரூபாய் 1.5 கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது.
