பத்திரிக்கையாளர்கள் இனி முன் களப்பணியாளர்கள்…மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செய்தித்தாள், காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறையே. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய கடமையை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அவர்கள் அயராது உழைக்கிறார்கள்.
கடும் மழையிலும், வெயிலிலும், பெருந்தொற்றிலும் தங்களது உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் இனி முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் இனி வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
