Covid19உலகம்

வேலைப்பளுவால் ஒரு வருடத்திற்கு இத்தனை லட்சம் பேர் உயிரிழப்பா…! எச்சரிக்கும WHO

அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக மட்டும் 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் உலகளவில் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது
Long Working Hours | வேலைப்பளு காரணமாக ஒரே வருடத்தில் 7.45 லட்சம் பேர் உயிரிழப்பு; எச்சரிக்கும் WHO!

வேலை, வேலை என ஓடி கொண்டு இருக்கும் நபரா நீங்கள்? உங்கள் ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் தேவை என எச்சரித்துள்ளது உலக சுகாதார மையம். வேலைப்பளு நம் உடலை பலவீனப்படுத்தும் என்று நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், தற்போது WHO தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் நம்மை பதற்றம் அடைய செய்கின்றன.

சமீப புள்ளிவிவரபடி, கடும் வேலைப்பளுவால் ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு மட்டும் 745,000 பேர் உலகளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. இதில் முக்கியமாக கவனிக்கூடியது என்னவென்றால், இந்த கொரோனா தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனறு மேலும் ஒரு அதிர்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளது WHO.

உலக சுகாதார மையத்தின் தகவலின் கீழ் ஒரு வாரத்திற்கு 35 இல் இருந்த 40 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு 55 அல்லது அதற்கு அதிகமான மணி நேரங்கள் வேலை செய்தால் உடல் நலத்தை பெருமளவில் பாதிக்ககூடும். இந்த நீண்ட பணியானது மாரடைப்பு வருவதற்கு 35% வழிவகுக்கும், இதய நோயால் உயிரிழக்க 17% வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளது

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) சேர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும் வயதான ஆண்களுமே. வேலைப்பளுவால் உயிரிழப்பு என்பது உடனடியாக நிகழாவிட்டாலும், அதன் தாக்கமே எதிர்காலத்தில் நோய்வாய்ப்பட முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் கொரோனா கால ஊரடங்கில், வீட்டில் இருந்து வேலைபார்க்கும் முறை இவையெல்லாம் ஊழியர்களை அதிக நேரம் வேலைபார்க்கவே நிர்பந்திக்கின்றன என்ற தகவலையும் உலக சுகாதார மையம் குறிப்பிடுகிறது. ஊழியர்கள் 10% வரை அதிக நேரம் வேலை செய்வதாக தெரிவித்துள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புள்ளி விவரத்தில் , வொர்க் ஃப்ரம் ஹோம் முறையால் வாரத்திற்கு குறைந்தது 6 மணி நேரம் வழக்கத்திற்கு அதிகமாக ஊழியர்கள் வேலை செய்கின்ற்னர் என்று குறிப்பிட்டுள்ள்து.

கொரோனா காலத்தில் இணையவழியில் வேலை செய்ய ஏதுவான ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தே வேலை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் தொடங்கிய வொர்க் ஃப்ரம் ஹோம் பலருக்கு இன்றும் நீடித்து வருகிறது. வழக்கமாக அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்கும், வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ள்ன். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது நாம் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களை முக்கிய கவனம் கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்