ஐ.பி.எல்.தொடரில் என்ட்ரி கொடுத்த கொரோனா..! டெல்லி வீரர் தொற்றால் பாதிப்பு..
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் டெல்லி அணியில் வீரர் ஒருவருக்கு இன்று காலை நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர் வெளிநாட்டை சேர்ந்த வீரர் என்றும் கூறப்படுகிறது.
பரிசோதனையில் அவருக்கு தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது . இதையடுத்து புனே புறப்பட தயாராக இருந்த டெல்லி அணியை நிறுத்தி வைக்கும்படி அணி நிர்வாகத்திற்கு பி.சி.சி.ஐ. ஸ்ட்ரிக்டான அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. மேலும் மற்ற வீரர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவு வரும்வரை காத்திருக்கும்படி கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹார்டுக்கு கடந்த வெள்ளி கிழமை கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. அதற்கு அடுத்த நாள், அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான சூழலில், டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் தத்தி தடுமாறி மிகவும் கடுமையான முன் எச்சரிக்கையுடன் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றன இந்நிலையில் இந்த வருடம் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் மகிழ்ச்சியுடன் நடப்பு தொடர் நடந்து வந்தது , ஆனால் சில போட்டிகளே நடைபெற்ற நிலையில் இப்படி ஒரு சம்பம் ஆரம்பித்தது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
